தள்ளிப்போ என் உயிரே

உனைப்போல் எழுதத்தெரியவில்லை.நீ
மனித மழலையா புரியவில்லை.
பழகிய நாட்கள் அதிகமில்லை.நீ
அன்பா,அம்பா தெளிவுமில்லை.
நல்லநண்பன் நீயாக ,
எனக்குள் வந்தாய் தாயாக.
மெல்லநீ என்னை கரைத்திட நான்
உப்புச்சர்க்கரை இல்லையே.
பாறை என்னை உடைத்திட நீ
உடைந்து போவாய் கிள்ளையே..
உனக்கே உனக்கென வருவாளே.
நீ கேட்டதை தாண்டி தருவாளே.
உயிரே அவளிடம் உரைத்துவிடு.
உன் உயிரே அவளே, உறைந்து விடு..

எழுதியவர் : கு.தமயந்தி (23-Jun-17, 9:06 pm)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 225

மேலே