மலர்கள்

மலர்கள்
மதிப்பைப் பெறுகின்றன,
அவை
மங்கை தலையிலிருந்தால்,
இறைவன் சிலையிலிருந்தால்..

மலர்களால்
மதிப்பைப் பெறுகின்றனர்-
மணமக்களும்,
மனிதன்
பிணமான பின்னரும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jun-17, 6:50 am)
Tanglish : malarkal
பார்வை : 102

மேலே