மௌனம்
என்மேல் உனக்கு
விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம்..!
உனக்காக நான் அழுவதில்
நீ கர்வம் கொண்டிருக்கலாம்..!
வெறுப்பை கூட என்மேல்
நீ உமிழ்ந்திருக்கலாம்..!
எதுவாயினும் உன் மௌனத்தை
உடைத்தெறிந்து உரைத்திருக்கலாம் நீ..!
என் வரி(லி)களை
வாசித்துவிட்டு மௌனமாக
நீ கடந்ததைவிடவா
உன் வா(ள்)ய் வார்த்தைகள்
என்னை வதைத்துவிடும்??