அனிதா என் காதலி

இப்படித்தான் என் காதலி இருப்பாள்
என்று கற்பனையில் என்னவளை
சித்தரித்து நெஞ்சில் பதித்து
இன்பலோகத்தில் நெஞ்சம் பறக்க,
துயில் வந்து என்னை அணைத்திட,
தூங்கிவிட்டேன் ..........பாதி உறக்கத்தில்
ஒரு கனவும் கண்டேன்
அது ஒரு வர்ண கனவு அதில் என்னவளை
அப்படியே நான் கற்பனையில்
சித்தரித்து நெஞ்சில் பதித்து வைத்தவளைக்
இமியும் மாறாமல் கண்டேன்
உள் மனதில் நினைத்தேன் ஒரு
முழு நீள சினிமா பார்த்து கொண்டிருப்பதாய் !
இவ்வளவில் வைகறையும் வந்தது
கோல குயில் ஒன்று க்கூவி பாடிட
என் துயிலும் முடிந்திட கனவும் முடிந்தது
வாசலில் ஒரு சப்தம் என் தாய்
கதவைத் திறந்தாள் ; நானும் அவ்வளவில்
அங்கு சென்றடைந்தேன், அப்படியே
இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனேன்
அங்கு என் கண் முன்னே நின்றாள்
நேற்று கற்பனையில் நான் சித்தரித்த
வர்ண கனவிலும் கண்ட காரிகை!
கண்களை மீண்டும் கசக்கி திறந்து
ஒரு முறை மீண்டும் அங்கு நின்ற அவளை
பார்த்தேன் ..........!!!!!!!!!!!!
என்னவள், என் கற்பனை எழிலரசிதான்
என் முன்னே நின்றாள் ............
என் அம்மா இப்போது சொன்னாள்,
"ராமு, இவள் என் தாய் வகை தூரத்துறவு ,
இங்கு நம் வீட்டில் தங்கி
மருத்துவ முதுநிலைக்கல்வி படிக்க போகிறாள் "
பெயர் அனிதா என்றாள்...............
ஹலோ அனிதா என்று கூறினேன்
எங்கள் நட்பு , கனவு நெனவான நட்பு
அப்போதே துவங்கியது பார்வை
சந்தித்தபோதே ..............
அனிதா என் காதலி என்று
மனதிற்குள் சொல்லிக்கொண்டு
விரைந்தேன் வீட்டிற்குள்................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jun-17, 2:26 pm)
பார்வை : 82

மேலே