பருவத்தே பயிர் செய்

பருவத்தே பயிர் செய்ய பள்ளிப் படிப்பு அவசியம் தேவை. வீட்டில் ஒழுக்கம் பற்றி எவ்வளவு சொல்லித் தந்தாலும், பள்ளியில் கற்றுக் கொள்ளும் ஒழுக்கம்தான் கடைசி வரை கை கொடுக்கும்.. கோயில் இல்லாத ஊரில் குடி இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பள்ளி இல்லாத ஊரில் குடி இருப்பதால், வருங்கால நம் சந்ததிதான் பாதிப்புக்கு உள்ளாகும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நாகரிகம் வளர்ந்து வரும் இந்நாளில், பள்ளிப் படிப்பு மிக மிக அவசியம். பள்ளிப் படிப்பு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை அறவே போக்குகிறது. நான், எனது என்ற எண்ணம் மறைந்து, நாம், நாங்கள் என்ற எண்ணம் மனதில் உண்டாக பள்ளிப் படிப்பு உறுதுணையாக இருக்கிறது.

எழுதியவர் : raju (24-Jun-17, 5:36 pm)
சேர்த்தது : C.B.Raju
பார்வை : 1964

சிறந்த கட்டுரைகள்

மேலே