நீ மறந்து விட்டாயே

அன்பே ...
நம் கல்லூரி
நாட்களில்
நாம் இருவரும் காதலித்த
அந்த இனிமையான
தருணங்களில்
வகுப்பு இடைவேளை
சமயங்களில்
தேநீரும் சிற்றுண்டியும்
சுவைக்கும் போது
நாய்க்குட்டி ஒன்று
நம்மையே சுற்றிவந்து
நாம் சுவைத்த சிற்றுண்டி
மீதங்களை தின்னுமே
அந்த வளர்ந்த
குட்டி நாய்
இப்போழுதும்
என்னை மறக்கவில்லை
நீ மறந்து விட்டாயே
என்னையும்
என் காதலையும்
உன்னால் மட்டும் எப்படி ...?

எழுதியவர் : செல்வமுத்து.M (25-Jun-17, 3:59 pm)
பார்வை : 1012

மேலே