இதயக் கூடு

மனசு எனும் தோட்டத்தில்
மங்கை நீ வந்தாயே பறவையாக!

ஆசையாகப் பல விதைகளை என்
மனதில் விதைத்தவளே!

அன்பெனும் பழங்களை
பரித்து உன்னவளே!

என் இதய ஊஞ்சலில்
இளைப்பாறி சென்றவளே!

ஆயிரம் பறவைகள் கூடுக்கட்டிய
என் மனசுத் தோட்டத்திலே!

நீ கட்டியக் கூடு மட்டும் காற்றடித்தும் விழாத மாயமடி

நீ வரும் வரை என்றும் காத்திருக்கும்
என் இதயத்தோட்டம்........

எழுதியவர் : ஸ்ரீராம் ரவிக்குமார் (25-Jun-17, 11:19 pm)
Tanglish : idhayak koodu
பார்வை : 152

மேலே