காதலிக்காக

வானவில்லை உடையெடுத்து விண்மீன்களை கொண்டு சாயமிட்டு அழகேத்தினேன் அவளின் அழகிற்க்கு ஈடாக! மேகத்தை மெத்தையாக்கி மேனிக்கு இதமிட்டேன் மல்லி மலரெடுத்து தென்றலில் கோர்த்தேன் அழகு கூந்தலின் அழகிற்க்காக நிலவிலே பூஞ்சோலையெழுப்பி பனித்துளிகளினால் மாளிகை வடித்தேன் தேவதையின் உறக்கத்திற்க்காக இந்திரலோக அழகியையும் பணிப்பென்னாக அமர்த்தினேன் புள்ளிமான்களையும் போக்குவரத்திற்க்காக அழைத்துவந்தேன் இன்னும் என்னென்ன நான் செய்வேன்...... காத்திருக்கிறேன்............

எழுதியவர் : சக்திவேல் (26-Jun-17, 1:54 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 91

மேலே