ஆனந்த தேன்சிந்தும் பூஞ்சோலை

ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலை

பாரதிதாசன் சான்றிதழ் போட்டியாளர்

அழகான பூஞ்சோலையே அருகில்நீ வாராயோ?
வழக்கமான சொல்விடுத்து வண்ணமிகு காதலினால்
பழகிடவும் ஆசைகொண்டு பரவசமாய் அழைக்கின்றேன் .
அழகுடைய சிற்பமேநீ அன்புதனைப் தாராயோ?


செந்தமிழின் வாசத்தால் சேர்ந்திடவே விரும்புகின்றேன் .
பந்தமுடன் பூஞ்சோலையே பக்குவமாய் நெருங்கிடுவாய் .
தந்திடுவேன் நெஞ்சத்தை தரமான உன்னிடமே .
எந்நாளும் நீயன்றோ என்னுயிரும் நீயன்றோ ?


அந்தநாளின் நினைவெல்லாம் அப்படியே பிம்பமாக
இந்தநாளில் கண்முன்னே இனிமையாகத் தெரிகிறது .
எந்தநாளும் அந்நினைவு எனைவிட்டுப் போகாது .
பந்தத்தின் பண்புமிகு பக்குவத்தின் நன்னாளாம் .


வயதாகிப் போனாலும் வாலிபமே உள்ளத்திலே
பயமின்றி நானும்தான் பார்க்கின்றேன் பாரினையே .
வியப்புடனே நோக்காதீர் விடிவெள்ளி நானேன்பேன் .
முயற்சிதனை மேற்கொண்டே முழுதாக நேசிப்பேன் .


காதலுக்கு அழிவில்லை காதலுக்கு அகவையில்லை
சாதலுக்கு மாற்றாக சாற்றுகின்றேன் காதலினை
மோதல்கள் காதலுக்குள் மோகமுள்ளாய் நின்றுவிடும் .
காதலுள்ளம் என்றனுள்ளம் காலமெல்லாம் நீதானே !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Jun-17, 8:45 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 123

மேலே