உன் தவறா?என் தவறா?

தேக்கிய காதலும்
தேனாய் நிரம்பின
இருவிழி ஈர்ப்பினால் ஈர்த்துவிட்டாய்
தீட்டிய உன் விழியால்
பூட்டிய இதயம் திறந்தாய்
நெருப்பின் மீதும் சிரிக்கிறேன்
நிலவின் மீதும் அழுகிறேன்
தாயின் மடியில் தவழ்ந்த
நான்
உன் மடியில் உறங்க நினைக்கிறேன்
அதை அறியாமல் உறங்கினாய்
நிரம்பிய காதலும்
சுமக்க சுகமானது
தோன்றிய சுகமும்
சுட்டெரிக்கின்றன
காதல் சொல்லாதது
என் தவறா ?
காதல் அறியாதது
உன் தவறா?

எழுதியவர் : சக்திவேல் (27-Jun-17, 12:20 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 119

மேலே