சுவடு பால்நிறம் அழகிய தோற்றம் என்று எண்ணுவீரோ, சிவந்த வானில் மெல்லிய முகம் கண்டீரோ, இரவை ஆழ வந்த விண்ணின் சுடரோ, வட்ட வடிவம் எண்ணில் கண்டு சொக்கினீரோ விண்கற்கள் வீழ்த்தும் என் நிலை மாறவில்லை, வாழ்வின் துயரங்கள் இருந்தும் ஆண்மை மாறவில்லை, இருண்ட சமுதாயம் கொண்டும் ஒளி கொண்ட சுடரானோம், தழும்புகள் இல்லா போரில் வெற்றி யுண்டோ - நன்னெறியே

பால்நிறம் அழகிய தோற்றம் என்று எண்ணுவீரோ,
சிவந்த வானில் மெல்லிய முகம் கண்டீரோ,
இரவை ஆழ வந்த விண்ணின் சுடரோ,
வட்ட வடிவம் எண்ணில் கண்டு சொக்கினீரோ.


விண்கற்கள் வீழ்த்தும் என் நிலை மாறவில்லை,
வாழ்வின் துயரங்கள் இருந்தும் ஆண்மை மாறவில்லை,
இருண்ட சமுதாயம் கொண்டும் ஒளி கொண்ட சுடரானோம்,
தழும்புகள் இல்லா போரில் வெற்றி யுண்டோ - நன்னெறியே.

எழுதியவர் : த பால் சுந்தர் சிங் (27-Jun-17, 2:23 pm)
சேர்த்தது : பறை ஓசை
பார்வை : 90

மேலே