முறையோ தகுமோ

சீர்வரிசை செய்வதுபோல்
பீர் வாங்கிக் கொடுத்து
பால் மனம் மாறாத
பச்சிளம் பாலகனைப்
பருகவைத்து அழகு பார்த்த
மாமனுக்கு மதி இல்லையோ!
பெத்தவ பார்த்தா—வயிறு
பத்தி எரியுமுன்னு
பாவி மனம் நினைக்கலையே!

எத்தனையோ வழியிருந்தும்
அத்தனையும் விட்டுபுட்டு
காசுக்கு ஆசபட்டு
கள்ளுக்கடை பல திறந்ததாலே,
சோத்துக்கு அலையும் மாந்தர்
சொர்க்கத்தைக் காணவேண்டி
சேர்த்த காசை குடியில் கரைத்துவிட
சேர்ந்துகொண்ட சோகத்தால்
தெருக்களெல்லாம் உறவாகி
பிரியாமல் எப்போதும் இவனோடு

எதையும் அறிந்துகொள்ள
ஆசைபடும் மாணவர்கள்
களவையும் கற்பதுபோல்
கள்ளைக் குடித்துவிட்டு
சாலையில் கிடந்த காட்சி
சாவு விழுந்ததுபோல்
நெஞ்சு துடிக்கலையா?
பெத்த மனம் பித்தாகி
கண்ணீர் சிந்தலையா?

தமிழ் மண்ணில்
உயிர்வாழும் நெஞ்சங்களில்
கொஞ்ச நஞ்ச ஈரமும்
காய்ந்து போனது,
ஒட்டுமொத்த சமுதாயம்
கெட்டுவிட்டது,
வளமான தமிழகம்
வலுவிழந்து நிற்பது
முறையோ? தகுமோ?

எழுதியவர் : கோ. கணபதி. (27-Jun-17, 2:54 pm)
Tanglish : muraiyo thagumo
பார்வை : 60

மேலே