கவிதை பூங்கொத்தாய் உன்னிடமே

என்னிடம் ஏதோ இயல்பாய்
பேசுவதாய் தான் தோன்றுகிறது
உனக்கு !

உன் இதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு சொற்களையும்
ஒவ்வொரு மலராய் பாவித்து !
மொத்தமாய் சேர்த்து

அப்டியே கவிதை மலர்
பூங்கொத்தாய் உன்னிடமே
திருப்பி தந்து விடுகிறேன் !

எழுதியவர் : முபா (27-Jun-17, 5:10 pm)
பார்வை : 285

மேலே