கவிதை எனும் காதலி
கவிதைகள் ஆயிரம்
எழுதிய போது..
கனவில் வந்து
கவிதையாய் மாறியவள்....
இருள்சூழ்ந்த இரவுகளில்
ஒளிச்சுடராய் மாறி
காகிதங்களில் காதல் கதை சொன்னவள்....
மரங்கள் சூழ்ந்த மலைகளும்
கருமேகங்கள் சூழ்ந்த
வானமும்
விழிகளுக்குள் வட்டமிடும்
அவளும்
எனக்குள் இருக்கும் கவிஞன்...
எழுதுகோல் பிடித்து எழுதியபோது
கனவுகள் வந்து தொலைத்தது...
விழிதிறந்து பார்த்தபோது
மை தீர்ந்து போனது...
காகிதங்கள் நிறைந்து
காதல் கவிதை சொன்னது...
இதோ எழுதிக்கொண்டே இருக்கிறேன்...
விரைவில் காகிதமும் மையும்
தீர்ந்துவிடலாம்....
விழிகளுக்குள் வந்து
காதல்கவிதை சொன்னவளுக்கு
மையும் காகிதமும் தீர்ந்தாலென்ன!!!!
அவளே கவிதை தானே !!!