ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தமிழின் கருவூலம்
தமிழரின் அடையாளம்
திருக்குறள் !

பரவ விடாதீர்
தொற்றுநோய்
தமிங்கிலம் !

கவனம் ஆண்களே
கன்னம் கிள்ளியது
கொலையில் முடிந்தது !

முடியவில்லை
ஆடவோ அசையவோ
கையில் குடுமி !

உலகம் சுற்றும் வாலிபரே
உள்நாட்டையும் பாருங்கள்
உழவர்கள் தற்கொலை !

தினமும் தாக்குவான்
கைதும் செய்வான்
இலங்கை நட்பு நாடா ?

குறைந்தது வேகம்
வயது ஆக ஆக
வாகனத்தில் !
.
கொட்டு இன்றி ஆடும் காவலர்களுக்கு
கொட்டுத் தந்தார் ஆணையர்
தலைக்கவசம் சுற்றறிக்கை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Jun-17, 8:22 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 169

மேலே