காதல்
தென்றலாய் என்னுடன் எப்போதும்
உறவாடும் நீ இன்று ஏன்
புயலாய் மாறி சீறுகிறாய் ?
ஓ புரிகிறது இன்று நீ
என்னை அவனுடன் பார்த்ததாலோ?
அவன் என் பள்ளிப் பருவ நண்பன்
இருபது வருடங்கள் கழிந்து
இன்றுதான் இந்த என் அலுவலக
வாசலில் தற்செயலாய்ப் பார்த்தோம்
இந்த சந்திப்பு உன் மனதில் இத்தனை
வேகமாய் ஒரு சந்தேகம் தந்ததென்றால்
நம் காதல் நீ எப்போதும் சொல்லுவாயே
"நம் வாழ்வு உள்ளவரை வாடா மலராய்
நீடிக்கும் "என்று அது பொய்த்துவிடுமோ
நீயே சொல்லு
காதலில் சந்தேகம் நல்ல பாலில் விழுந்த
விஷம் போல ,