துயில் எழுந்தேன்
செங்கதிரவன் விரிந்து உலகிற்கு ஒளி யூட்ட
பறவைகள் இன்னிசை பாடி கதிரவனை வரவேற்க
பசுமை போர்த்திய கதிர்கள்
மெல்லிய இசையில் நடனம் புரிய
சில்லென்ற காற்று தாளம் போட
இயற்கையின் இனிய கீதம் செவிகளில் கேட்க
இளஞ்சூரியனின் ஒளி என் இமைகளில் பட
நான் துயில் எழுந்தேன்