இதயத்தை அள்ளிடுதே

இளங்காலைப் பொழுதினிலே
இனியவளாம் மதிமறைய
களங்கமின்றிக் குளித்தெழும்பும்
கதிரவனின் ஒளியினிலே
பளபளக்கும் நதியலையும்
பையவந்து கரைதழுவ
உளமெங்கும் புத்துணர்வில்
உற்சாகம் பெருகிடுதே !

பொன்னொளிரும் மேகங்கள்
புதுப்பெண்ணாய் விண்ணுலவத்
தென்னையிளங் கீற்றதுவும்
தென்றலிலே அசைந்தாடக்
கன்னலெனக் குரலெழுப்பிக்
கருங்குயிலும் சுதிகூட்ட
இன்பவெள்ளம் பொங்கிடுதே
இதயத்தை அள்ளிடுதே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Jun-17, 11:41 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 156

மேலே