அழகு அழகு
நான் படித்ததில் என்னை மிகவும் பிடித்த சிறுகதை ....
ஒரு ஊரில் திருவிழா அருமையாக நடைப்பெற்று கொண்டிருந்தது.அப்போது திடீரென்று ஒரு அழுகை குரல் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு குழந்தை...அக்கூட்டத்தில் ஒருவர் அக்குழந்தையிடம் சென்று
ஏன் நீ அழுகிறாய்? என்று கேட்டார். அக்குழந்தை என் அம்மா கூட திருவிழாக்கு வந்தேன் கூட்டத்துல எப்படியோ நான் தொலஞ்சுட்டேன்....அந்த மனிதர் சரி அழாதே உன் அம்மா பற்றி எதாவது அடையாளம் சொல்லுமா... என்றார் .அக்குழந்தை என் அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க.பஞ்சிபோல முடி நட்சத்திரம் போல மின்னும் கண்கள் நிலா போல முகம் போன்று வர்ணித்தாள்.பின் சிறுதூரம் சென்றபின் ஒரு பெண் ஓடி வந்து அக்குழந்தையை கட்டித்தழுவினர்.அந்த பெண் பார்ப்பதற்கு ஒளியில்லா முகம் சிக்கான முடி எப்படி காணப்பட்டார். அப்பெண் அந்த மனிதருக்கு நன்றி சொன்னாள்.பின் அம்மனிதர் அக்குழந்தையிடம் என்னமா நீ உன் அம்மா பற்றி ஏதேதோ சொன்ன...அக்குழந்தை நான் என் அம்மா பத்தி உண்மையா தான் சொன்னேன்.என்னமா சொல்லற .ஆமா என் அம்மா எனக்கு எப்போமே அழகுதான்...என்றாள்.
ஆகவே அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது.ஒருவரின் வெளி தோற்றம் வெளி அழகை பார்க்காதீர்கள் அதையும் தாண்டி மனம் குணம் இருப்பதையும் பாருங்கள்!!!.....