காசா பணமா என்னையும் கவிஞனாக்கி விட்டு போயேன்

காசா ? பணமா ?
கடைக்கண் பார்வை ஒன்றை வீசி
கள்ளம் கபடம் இல்லா
சிரிப்பை கொஞ்சம் உதிர்த்து விட்டு போயேன் !

காசா ? பணமா ?
கவிதை எழுத கொஞ்சம்
வார்த்தைகளை உதிர்த்து விட்டு போயேன் !

காசா ? பணமா ?
என்னையும் உன் நெஞ்சுக்குள்ள
வாழத்தான் அனுமதியும் தந்து விட்டு போயேன் !

காசா பணமா ..என்னையும் கவிஞனாக்கி விட்டு போயேன் !

எழுதியவர் : முபா (28-Jun-17, 4:28 pm)
பார்வை : 99

மேலே