ஜெயமோகனின் கருவி மாமழை

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கருவி மாமழை வீழ்ந்தென அருவி

விடரகத்து இயம்பும் நாட

எம் தொடர்பு தேயுமோ நின்வயினானே?



நீ காதலை மறந்துவிடலாம். நள்ளிரவில் காட்டில் இருண்ட மாமழை பெய்ததை அருவி காலையில் மலைச்சரிவுகளில் எழுந்து விழுந்து கூச்சலிட்டுச் உரைக்கும் நாட்டைச் சேர்ந்தவனே. எம் உறவு உன் உள்ளத்தில் தேய்ந்தழியுமா என்ன?

எழுதியவர் : (29-Jun-17, 3:23 am)
பார்வை : 53

மேலே