புன்னகை

பூக்களை பாருங்கள்
மாலையில் உதிர்வோம்
என்ற நிலையிலும்
காலையில்
புன்னகைக்கின்றன
ஆறாம் அறிவு என்பது
பூக்களுக்கு உண்டா...?

ஆறாம் அறிவு
உள்ள மனிதனோ
புன்னகைக்க மறக்கிறான்
கோபத்தில் கொதிக்கிறான்
நாளைய வாழ்க்கையை
நினைத்து இன்றைய வாழ்வை
இழக்கிறான்...

வாழப்பிறந்துள்ளோம்
வாழ்வோம் புன்னகையோடு
போராட்டம் என்பது
நகமும் சதையும் போல
வாழ்க்கையோடு இணைந்த ஒன்று
இத்தனை துன்பத்திலும்
புன்னகைப்பதே ஆறாம் அறிவு...
புன்னகைக்க மறந்தால்
நாம் மனிதர்கள் அல்ல...

எழுதியவர் : செல்வமுத்து.M (29-Jun-17, 9:23 am)
Tanglish : punnakai
பார்வை : 787

மேலே