உண்ணப்போகிறவர் பெயர்

ஒரு ஆட்டை ஒரு வேட்டை நாய் துறத்த
ஆடு ஒரு திராட்சை புதருக்குள் புகுந்துவிட
நாய் கண்ணுக்கு எட்டின தூரம்வரை ஆடு தென்படவில்லை

மூச்சிறைக்க ஓடி வந்த களைப்பில் நாய்
களைப்பாற நின்ற இடத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு சற்று
களைப்பாறியது

ஆட்டை மேயவிடாது துறத்தியதால்
அகோரப்பசி ஆட்டிற்கு கழுத்திற்கு
எட்டியவரை இருந்த கவித் தழைகளை
தின்று தீர்க்க புதர் வெட்ட வெளிச் சமாகிவிட
நாயின் கண்ணுக்கு ஆடு பட்டுவிட்டது
நாய் ஆட்டை கொன்று தின்றுவிட்டது

இதில் உணரவேண்டும்
ஒவ்வொரு தானியத்திலும் எழுதப்பட்டு இருக்கிறது அதை உண்ணப்போகிறவர் பெயர் என்பது

எழுதியவர் : Abraham Vailankanni (29-Jun-17, 10:24 am)
பார்வை : 298

மேலே