மகரந்தப் புன்னகை

காலை
மஞ்சள் வெயிலோடு
சேர்ந்து எழுகிறது
உன்
நினைவின் வெளிச்சம்

குளியலறை நீர்த்துளியில்
குழையும் வழலையோடு
சேர்ந்து மணக்கிறது
உன்
மனதின் வாசனை

சிற்றுண்டியின் விள்ளலோடு
தொண்டைக் குழியை
தொட்டு இறங்குகிறது
மூச்சுமுட்டக் காத்திருக்கும்
உன்
முத்தச் சுவை

வெயிலோடு துளிர்க்கும்
வியர்வைத் துளியில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
உன்
முன் ஜென்ம
அணைப்பின் மிச்சம்

இமைகளைத் தழுவும்
கனவுகளில் ஒளிர்கிறது
சந்தோஷம் ததும்பும்
உன்
மகரந்தப் புன்னகை !

#மதிபாலன்

எழுதியவர் : Mathibalan (2-Jul-17, 6:17 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 232

மேலே