மனிதன் மாறவேயில்லை

சிலந்தி
வலை பின்னுவதை
பார்த்தேன்
எத்தனை அழகு
எத்தனை துல்லியம்
வியந்தேன்
அதன் வலையை
பார்த்து அல்ல
அதனுடைய
விடாமுயற்சி மற்றும்
தன்நம்பிக்கையை
எத்தனை முறை தவறி
விழுந்தாலும்
மீண்டும் எழந்து
பாதியிலே விடாமல்
தன் வலையை
பின்னிவிடுகிறது
மனிதனோ ஒரு தோல்வி
வாழ்க்கையில் ஒரு அடி
துவண்டு போகிறான்
பறவைகளும் பூச்சிகளும்
விலங்குகளும் மனிதனுக்கு
அவ்வவ்வப்போது
சில பாடங்களை சொல்லிக்கொண்டே
தான் இருக்கிறது
மனிதன் தான் மாறவேயில்லை...

எழுதியவர் : செல்வமுத்து.M (3-Jul-17, 9:41 am)
பார்வை : 411

மேலே