வரிகள்

*
ஓரே நாடு ஓரே மொழி ஓரே வரி
ஓரே ஊரு ஓரே மக்கள் ரெண்டு சுடுகாடு.
*
என்றேனும் ஒருநாள் குப்புறத்தள்ளும்
கண் தெரியாமல் வரிக்குதிரை.
*
வீட்டில் சாப்பிட்டால் வரியில்லை
பேசி நாக்குக்கு அடக்கமில்லை.
*
எந்த ஒன்றுக்கு வரிவிதிக்கவில்லை
எல்லாமே வரியின் கீழ் உள்ளடக்கம்.
*
வரியை ஏற்றுவார்கள் மக்கள் எதிர்த்தால்
குறைப்பதாய் சொல்லி ஏமாற்றுவார்கள்.
*
வரியோடு வாழ்வு
வரியோடு சாவு.

ந.க. துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Jul-17, 9:52 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : varigal
பார்வை : 146

மேலே