தலைப்பில்லா கவிதைகள்
[] தலைப்பில்லா கவிதைகள்...
----------------------------------------------------------------------
எந்த எழுத்தை கூட்டினாலும்
எந்த வார்த்தை சூட்டினாலும்
சிறந்த தலைப்பு கிடைக்கவில்லை
சிவந்த உன் அழகு கண்டு
பிறந்த என் கவிகளுக்கு...
களைப்பின்றி கவி முடித்தவன்
தலைப்பிற்க்கு மட்டும்
தடுமாறுவதேன்..
முடிந்த வரை முயற்சித்தேன்
விரிந்த வரை சிந்தித்தேன்
வழிந்த என் கற்பனையில்
தெரிந்தது ஒரு தலைப்பு
அது உன் பெயர்...
உன் பெயரை தலைப்பாக சூட்டி
என் விழியில் விளக்கெண்ணெய் ஊற்றி
எப்படி படித்தாலும்
தலைப்பாக தனியாக தெரியாமல்
கவியோடு கவியாகவே
கலக்கிறது உன் பெயர்...
வேறு வழியின்றி
தலைப்பெனும் மொழியின்றி
இன்று வரை தொடர்கிறது
என் கற்பனைகள் ..
தலைப்பில்லா கவிதைகளாய் !
யாழ்