இயற்கை

காலை வேலைக்கு போகவேண்டும்
என்ன செய்ய
மழைக்கால இரவு


மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை!


சமாதிக்கு மட்டுமல்ல
மலர்வளையம்
பூக்களுக்கும்.


யாருமற்ற பாலைவனம்
தன்னந்தனியாக
ஒற்றைமரம்!


மிகச்சிறந்த ஓவியத்தை
மிஞ்சிய அழகு
குழந்தையின் கிறுக்கல்.

எழுதியவர் : (5-Dec-09, 2:08 pm)
Tanglish : iyarkai
பார்வை : 723

மேலே