இயற்கை
காலை வேலைக்கு போகவேண்டும்
என்ன செய்ய
மழைக்கால இரவு
மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை!
சமாதிக்கு மட்டுமல்ல
மலர்வளையம்
பூக்களுக்கும்.
யாருமற்ற பாலைவனம்
தன்னந்தனியாக
ஒற்றைமரம்!
மிகச்சிறந்த ஓவியத்தை
மிஞ்சிய அழகு
குழந்தையின் கிறுக்கல்.