ஒரு அப்பாவின் வாழ்த்து -கங்கைமணி

பிறந்தநாள் காணும் என் அன்பு மகனை வாழ்த்துங்கள் !...,வளரட்டும்.

அன்புக்கடலில்
அலையென திகழ்வாய்.,
அரும்பெரும் செயல் பல
அறிந்திட வளர்வாய்.
அறம் பொருளடங்கிய
அருட்பெரும் சுடராய்.,
அவையினில் அழகிய
அறிஞனின் கலையாய்,
அவ்வையின் முதுமையும்
அவர்கண்ட பெருமையும்
அடைந்திட வரும் பெரும்
ஆண்டவன் அருளாய்.,
ஆன்மிக கடல்தொடும்
ஆதவன் கதிராய்,
ஆறுமுகன் அருளிய
அகரமே வளர்வாய்.
ஆண்டுகள் பல உனை
அணைத்திட பிறக்கும்
அன்னையின் தந்தையின்
ஆனந்தம் கிடைக்கும்.
அடியெடுத்தளந்திடு
அனைத்தையும் ஜெயித்திடு
அன்போடுனக்கெந்தன்-
ஆசிகள் பல பல..,

மாதவம் புறிந்ததில்
மலர்ந்த்திட்ட மகனே !
வாழிய நீ ! பெரும் புகழுடன் நீ !.

அன்புடன் உன் அப்பா...கங்கைமணி.

எழுதியவர் : கங்கைமணி (7-Jul-17, 8:45 am)
பார்வை : 257

மேலே