உன் தண்ணொளியும் பெண் தூய உள்ளமும்
அம்புலி உன் முகத்தில்
பதிந்த அந்த வடுக்களை
பாரா இப்புவி மானுடர்கள்
உன் சிறப்பான தண்ணொளியையே
போற்றுகின்றனர்...
பெண் பார்க்கும் படலத்தில் மட்டும்
ஏன் ஆண்கள் அவள் தூய உள்ளதை
தூர எறிந்துவிட்டு
தேயும் அழகுக்கு சாய்கின்றனர்?