எப்போது உணர்வாய் என் காதலை என்னுயிரே 555

என்னுயிரே...

ஊமையான என் கண்களுக்கு
பேச தெரியவில்லை உன்னிடம்...

நாளையாவது நீ
சொல்லிவிடு உன் காதலை...

உன்னிடம் சொல்ல
தெரியவில்லை...

சொல்லிவிட்டேன்
புரியவில்லை உனக்கு...

உனக்கு என் பாசம்
போலியானது என்கிறாய்...

உன்னிடம் விலக்கி சொல்ல
தெரியவில்லை எனக்கு...

காத்துகொண்டு இருக்கிறது
என் மரணம்கூட...

காதலுக்காக நானும்
இறந்துவிட்டால்...

நீ வரலாம் உன்
கண்களுக்கு அனுமதி...

எனக்காக நிச்சயம்
துளிநீர்கூட சிந்திவிடாதே...

உன் கண்ணீருக்கு
இல்லை அனுமதி அங்கு...

நீ எப்போது உணர்வாய்
என் காதலை என்னுயிரே...

உன்னிடம் மண்டியிட்டு
என்காதலை சொன்ன நான்...

நாளை மண்டியிட்டு
உன் பதவிரலுக்கு...

மெட்டியிட காத்திருக்கிறேனடி
உன் கணவனாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Jul-17, 8:35 pm)
பார்வை : 455

மேலே