நீ எங்கோ தனியாய் நான் எங்கோ தனியாய்

விடிந்தும் விடியா பொழுது !
பனிமூட்டம் மறைத்த பகலவன் !
இதோ லேசான தூறல்
பனிவிலகி மழையின் தூறல் சற்றே
கூடுதலாய் பொழிய துவங்கியது !
உன் மடி மீதும் நானும்
என் மடி மீது நீயும் பேசி சிரித்த நிமிடங்கள் !
நீ என் தோள் சாய்ந்து உறங்கிய நிமிடங்கள் !
சண்டையிட்ட நிமிடங்கள் !
சமாதானம் செய்த நிமிடங்கள் !
காத்திருந்த நிமிடங்கள் !
கண்கலங்கிய நிமிடங்கள் !
நம் நிமிடங்களை சேமித்து வைத்தபடி
மழையில் நனைந்த படி
விசுப்பலகை விசும்பலோடு தனியாய் !
நீ எங்கோ தனியாய் !
நான் எங்கோ தனியாய் !

எழுதியவர் : முபா (9-Jul-17, 11:06 am)
பார்வை : 349

மேலே