என் கவிதைக்கு உயிர் தந்தாய்

உன் மை தீட்டிய விழிப்பார்வைகளில்
உன்மேல் மையல் கொள்ளச்செய்தாய் !

நான் மையல் கொண்ட பெண்மையாதலால்
என் இதயம் முழுமைக்கும் நீயே மையம் செய்தாய் !

நான் பார்த்த பார்வைக்காய் உன்னுள் ஆயுள்
முழுதும் கைதியாய் என்னை சிறை வைத்தாய் !

உன் இதழ் உதிர்த்த வார்த்தைகளால் இரவின்
பொழுதெல்லாம் என் உறக்கம் கெடுத்தாய் !

உறக்கத்தின் நடுவே நான் காணும் கனவெல்லாம்
கன்னி நீ மட்டுமே ஆட்சி செய்தாய் !

நல்ல வேளை நீ மௌனம் கலைத்ததால் எனக்கு
கவிதை எழுதும் வாய்ப்பு தந்தாய் !

இதோ இப்பொழுதும் என் கவிதை எல்லாம் நீ மட்டுமே
நிறைந்து என் கவிதைக்கு உயிர் தந்தாய் !

எழுதியவர் : முபா (11-Jul-17, 12:31 pm)
பார்வை : 396

மேலே