கருப்பு நிறத்தழகி

சந்தன நிறமோ
சிகப்பழகோ இல்லை
கருப்பு நிறத்தழகி
தான் அவள்
கருப்பும் அழகு
என்று எனக்கு
காட்ட பிறந்தவள்!

என்னில் என்ன
மாயம் செய்தாளோ
கருங்குழலியை கண்டதும்
கரு மேகங்களை
கண்டு நடனமாடும்
மயில் போல
மனசு ஆடுதடி

ஒதுக்கப்படும் கறுப்பை
ஒப்பில்லா அழகாக்க
பூமி பந்தில்
பிறந்தவள் நீ

உன்னால் அழகானது
வெண்மேகங்கள் மட்டுமே
அழகென இதுவரை
நினைத்து கொண்டிருந்த
என் கருப்பு மனசு

கயல்விழி உன்
கண்களின் கதைகள்
போதும் காலங்கள்
தோறும் கண்ணனுக்கு !!!

யாழினி வளன்...

எழுதியவர் : யாழினி வளன் (13-Jul-17, 12:16 am)
பார்வை : 1764

மேலே