வாழ ஏங்குகிறேன் என் நட்பே
உந்தன் ஆறுதல் வார்த்தைகள்
எந்தன் ஆவியை ஆசுவாசப்படுத்துகின்றது...!!!
உலகம் அறியும் முயற்சியிலெல்லாம்
உடன் பவனி வந்த
என் இருள் வந்தும்
என்னை பிரியா நிழழே...!!!
என் ஆசானாய்
நீ திருத்திய தவற்றை
என் தலை போயினும்
செய்ய துணியேன்...!!!
விண்ணுலகம் எய்திடினும்
அங்கே உந்தன்
அரவணைப்பில்,கண்டிப்பில்,அன்பில் வாழ
ஏங்குகிறேன் என் நட்பே...!!!