எது கவிதை
வில்மேலே எழுதுவதை அம்பென்பார்கள்
விழியாலே எழுதுவதைக் காதலென்பார்
புல்மேலே பனித்துளிகள் எழுதிப்பார்க்கும்
பூமேலே வண்டுவந்து எழுதிப்போகும்
நெல்மேலே சூரியனின் ஒளிஎழுதும்
நீர்மேலே கீழேயும் மீன் எழுதும்
சொல்மேலே பொருள்வந்து சுவையும்சேர்ந்து
சூத்திரம்போல் இருப்பதுதான் கவிதையாகும்.