விவசாயம்

புல்கூட முளைக்காத பாலையும்
பசுமையான காவிரி நீர்ச் சாலையும்
ஒன்றாகிடுமோ உமக்கு
பாலையை பசுமையாக்க முயற்சிக்கிறார்கள்
எங்கள் பசுமையை பாலாக்குகிறீர்கள்

கரும்புகைதான் கொடுக்கும் உங்கள் எண்ணெய் வளம்
நல்லக் காற்றைத்தான் கொடுக்கும் எங்கள் விவசாய நலம்
உம்மையது வல்லரசாக்க உதவும்
எமக்கது நல் வாழ்வினைக் கொடுக்கும்

பூமிக்குள்ளிருந்து நெருப்பை எடு
கருப்பையெடு கலங்காது நீர்
நீ எடுக்கும் எண்ணெயினால் எங்கள்
நிலமகள் களர் மகளாகிடுவாள்
நைஜீர் டெல்டாவைக் கண்டீரோ?

காவிரி நீர் மறித்து - எங்களை
கடல் தாண்டி செல்ல வைத்தீர்-இப்போது
எங்கள் பூமியைப் பிளந்து
காவு வாங்க நிற்கின்றீர்

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவிற்கு
இருக்கிறதோ இல்லையோ
யாம் அறியோம்
கூட்டணியுடன் ஆண்ட கட்சிகட்கும்
கூட்டணியில்லாமல் ஆள்கின்ற கட்சிகட்கும்
ஒற்றுமையிருக்கிறது இவ்விடயத்தில்!

எங்களுக்குள் பழுவேட்டரையரையும் வந்தியத்தேவனையும் கொடும்பபாளூர் வேளிரையும்
வேளக்கார படைகளையும் சோழ மன்னர்களையும் தேடுகிறோம்
அந்த மரபினர் எங்குதான் போயிருப்பர்
நெடுவாசல்களையும் கதிராமங்களங்களையும் காக்காமல்?
ப சம்பத்குமார்.
#Kathiramangalam #neduvasal #ongc
.

எழுதியவர் : ப சம்பத்குமார் (15-Jul-17, 6:03 pm)
சேர்த்தது : sambath kumar
Tanglish : vivasaayam
பார்வை : 329

மேலே