சிற்பிபோல ரசித்தேன்
கன்னியவளைக் கண்டு
கண்கள் படபடத்தது
நாணலைவளைக் கண்டு
நரம்புகள் துடிதுடித்தது !
நடையழகைக் கண்டேன்
நடைதளர்ந்தேன் நான்
உடையழகைக் கண்டேன்
உவகையுற்றேன் நான் !
குரலினைக் கேட்டேன்
குயிலாக உணர்ந்தேன்
குறுநகையைக் கண்டேன்
குதூகலம் அடைந்தேன் !
நெருங்கி வந்தவளை
நெருக்கத்தில் கண்டேன்
சிலையாய் நின்றவளை
சிற்பிபோல ரசித்தேன் !
பழனி குமார்