தினமும் எழுதுகிறேன் கவிதைகளை
ஏனென்று புரியாமல்
என்னையும் அறியாமல்
எதற்கென தெரியாமல்
தினமும் எழுதுகிறேன்
கவிதைகளை
என் கவிதைகள்
அன்பின் உயிரோட்டமாக இருந்தாலும்
அர்த்தமற்ற பதராக இருந்தாலும்
அதன் காரணம் உன்மேல்
நான் கொண்ட
காதல் மட்டுமே
என்றேனும் என்
கவிதைகளை நீ
வாசிக்க கூடும்
அன்று உன் விழித்தீண்டி
உயிர்பெற்றெழும் என்
எழுத்துக்கள் உன்
கன்னங்களை முத்தமிடும்
காதலுடன் என்ற
நம்பிக்கையிலேயே தினமும்
எழுதுகிறேன்
யாழினி வளன் ....