அருகருகே தனியாய்

அருகருகே அமர்ந்திருந்தோம்
பேசவில்லை;
என்ன பேசுவதென்று
அவரவர்க்குள் பேசிக் கொண்டோம்.

தடவலுக்காகவோ?
தழுவலுக்காகவோ?
அறைதலுக்காகவோ?
வார்த்தைகள் கோர்க்கப்படுகின்றன.

காயப்படுத்தலாம்.
காயப்பட்டதன் காரணமாயிருக்கலாம்.

பேச்சின் நீளத்தை
அவரவர் தீர்மானிக்க முடியாது.
அடுத்தவர் பேச்சுத்தான்.

பேச்சு
பிரிவையோ? உறவையோ?
பலப்படுத்தலாம்.
எந்த விளைவும்
இல்லாமலும் போகலாம்.

எழுதியவர் : கனவுதாசன் (16-Jul-17, 6:16 pm)
பார்வை : 76

மேலே