விடியாத இரவுகள்
அவள் என் உயிரோடு உயிராக கலந்தாள்
அவள் என் மனதை எடுத்துச் சென்றாள்
அவள் எங்கே எனத் தேடுகிறேன்
அவள் பிரிவால் நான் வாடுகிறேன்
என் வாழ்க்கையில் ஒளியில்லை
என் நெஞ்சினில் நிம்மதியில்லை
என் கண்களும் உறங்கவில்லை
என் இரவுகள் விடியவில்லை
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்