விவசாயம்

எம் நெஞ்சம் தான் பொறுக்கின்றதே
வானமும் பொய்த்தது
பூமியும் பிளந்தது
நீரின்றி பசுமை இன்றி
வாழ்வின்றி
வெறுமை ஊன்றி தவித்தாலும்
வாழ்வே இருள் சூழ்ந்தாலும்
உதிரமே உறைந்து மடிந்தாலும் உழைத்த கரங்களும் ஓடிய கால்களும் முடக்கப்பட்டு கிடந்தாலும்
நீரும் வளமும் அற்று செழித்த செல்வமும் இல்லாமலும்
ஒரு சொட்டு நீருக்காக தவித்து பசியால் துடித்து ஒரு பருக்கை உணவிற்காக அலைந்தாலும்
வானை நோக்கினேன் நம்பிக்கையுடன்
மழை வருமென்று
இலைகள் கருகி உதிர்ந்து மக்கி உரமாகிறதே அதுபோல் தான் என்
வாழ்வும் ..

எழுதியவர் : (16-Jul-17, 6:23 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : vivasaayam
பார்வை : 621

மேலே