நெஞ்சிலே முத்தமிட்டேன்

தரகர் காட்டிய பெண்ணின் புகைப்படம் பார்த்து அவளை திருமணம் செய்து கொள்கிறான் ஒரு வாலிபன்.

திருமணம் முடிந்து மேக்கப் எல்லாம் களைந்து முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான்.
காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை அப்போதே மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான்.

அவளோ என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

வெளியுலகிற்கு கணவனும் மனைவியுமாக வாழ்ந்தவர்கள் நாலுசுவருக்குள் வெறுக்கபட்டவளாய் காலத்தை ஓட்டினார்கள்.

ஒருநாள் கேட்டேவிட்டாள்
"ஏன் என்னை வெறுக்கின்றீர்கள். நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன். அது ஏன் உங்களுக்கு புரியவில்லை."

அவள் கெள்விக்கு இவன் எந்தபதிலும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.

சில மாதங்கள் சென்றது..

அந்த வாழ்க்கையில் ஒருநாள்..

இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.
வலி தாங்க முடியாமல் அய்யோ... அம்மா.. என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நண்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு நடுநிசி என்றுகூட பாராமல் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்.

இவளை பார்த்த கணவன் பயந்து போயி திரு திருவென முழிக்கிறான். அவன் தன் வலியுடன் இவளின் செய்கையை கண்டுகலங்குகிறான்.

கணவனின் நண்பன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். அவனுதவியுடன் காரில் கணவனை தன் மார்போடு அனைத்து கொண்டு அழுதகண்ணோடு "அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள்" என்கிறாள்.

மார்பின் வலி அதிகரிக்கவே அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான்... அவள் மடியில் தலைசாய்த்தபடி.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். நண்பர்கள், அவனது வீட்டார், மனைவியின் உறவினர்கள் எல்லோரும் வந்துவிட்டனர். அவளை ஆறுதல் படுத்தியும்
அவள் அழுகை அடங்கவில்லை.

இந்த பெண்ணிற்கு கணவன் மீது இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர்..

டாக்டர் திடீரென்று வெளியில் வருகிறார். "உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு..."

"சொல்லுங்க டாக்டர் அவர் எப்படி இருக்கார்..?"

"சின்னதா மாரடைப்பு வந்திருக்கு.. "

"அய்யய்யோ கடவுளே.."

"பயப்பட ஒன்றுமில்லை.. நீங்க அவர் மனைவிதானே உள்ளே வந்துபாருங்க. அதிகமா பேசவேண்டாம்..!"

"சரி" என்று தலையாட்டி விட்டு உள்ளே பாய்கிறாள்.

மருத்துவர்... அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...
அவள் டாக்ரின் பின்னால் நின்று இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்..

"இனி நீதாம்மா கவனிச்சுக்கணும். மருந்துகளை வேளாவேளைக்கு சரியா கொடுத்துடு " எழுதி கொடுத்துவிட்டு வெளியேறுகிறார்.

அந்த தருணத்துக்காய் காத்திருந்தவன் தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான்.!

சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்து போனது... அவள் கையை பிடித்துக்கொண்டு
"இனி நான் புகை பிடிக்கமாட்டேன்.. உனக்காக மட்டும் " என்கிறான்.!

அவளுக்கு அவன் சொன்ன வார்த்தையைவிட தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள்.

"உன்னை நான் வெறுத்தும் என் மேல் இவ்வளவு பாசமா.?" என்று கேட்க..

"நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி"
என்று ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் குனிந்து முத்தமிடுகிறாள்..!

அப்போது கவனிக்கிறாள் அவன் கண்களில் நீர்துளிகள்.. அதில் அவன் கேட்கும் மன்னிப்பு தெரிகிறது.. தன் கரத்தால் அவனது கண்ணீரை துடைக்கிறாள்..!

அப்படியே அவளை கட்டிபிடித்து முத்தமிட ஆசைபடுகிறான்.. முடியாததால் கண்மூடி அவள் நெஞ்சத்தில் முத்தமிடுகிறான்..!

காலம் எப்படி மாறி போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்..

கல்லறை சென்றபின்னும்
காலத்தால் அழியாதது கணவன் மனைவி உண்மை காதலே..!

-நட்புடன் குமரி

எழுதியவர் : முகநூல் (17-Jul-17, 2:43 am)
Tanglish : nenjile MUTHAMITTEN
பார்வை : 3328

மேலே