ஏழைக்கு எட்டாக்கனி

தேவதையே
நீ ஏழைக்கு வளைந்து கொடுப்பதில்லை
கற்சிலையாகவே நிற்கிறாய்...

பணம் படைத்தவர்கள்
உன்னை ரப்பர் சிலையாக
வளைத்து விடுகின்றனர்...

உன் கண்கட்டை
அவிழ்த்துப்பார்
உண்மை புரியும் உனக்கு
பசிக்கு கொத்திய பறவை
சிறைபறவை
பகட்டாக வாழ பலகோடி
சுருட்டிய பறவையோ
சுதந்திர பறவை...

சிபியே புறா
வேட்டையாடினால்
பெண் புறாக்கள் யாரிடம்
கேட்கும் தஞ்சம்
நிலை மாறிப்போனது
காப்பாற்று பெண் புறாக்களை....

உனக்கு சதை இரத்தம்
இல்லை இருந்திருந்தால்
வித விதமான வேடர்கள்
உனக்கும் குறிவைக்க
எள்ளளவும் தயங்க மாட்டார்கள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (18-Jul-17, 10:02 am)
Tanglish : yezhaiku ettaakkani
பார்வை : 355

மேலே