காதல் துளிகள்

.தீர்க்கமாய் மறுக்கிறாய்
நீ
தாபமாய் தவிக்கறது மனது...

2. நீ சொல்லாமலே இருந்துவிடு
நீ என்னைக்காதலிக்கிறாய்
என்ற நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
நீ சொல்லாமலே இரு....

3. ஆம் அல்லது இல்லை
என்பதை விட-உன் மெளனம்
அழகாய் சொல்கிறது
உன் காதலை.....

4. வானம் நீர் தெளிக்க
காகங்கள் பூபாளமிசைக்க
நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்- என் கவிதை காட்சியாக்கப்பட்டது....

5. நீ சொல்லாவிட்டாலும்
ஊர் சொல்லும் நம் காதலை....

6. என் கனவுக்குள் நீ
உன் கண்களுக்குள் நான்
நம் நடுவே காதல்
யாருக்கும் புலப்படாமல்-
பூவுக்குள் நுழையும் காற்றுபோல்.....

7. காற்று இசையமைக்க
பறவைகள் பாட்டிசைக்க
மென்தூரலில் நாம் மரமொதுங்க...
வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
நீ காதலைச்சொன்னாய்
உலகம் நிசப்தமானது.......

எழுதியவர் : ரிஷிசேது (18-Jul-17, 3:32 pm)
சேர்த்தது : ரிஷி சேது
Tanglish : kaadhal thulikal
பார்வை : 341

மேலே