தத்ததன சந்தத்தில் அமைந்த பின்முடுகு வெண்பா

முத்தமிழ்க் கொஞ்சிடும் முத்திரை தந்திடும்
இத்தரணி யெங்கும் இனித்திடும்! - சத்தமாய்
மத்தளமு ழக்கமிட மத்திமையி லிச்சையுற
ஒத்துவிடு மற்புதமு முற்று .

( மத்திமை - நாத ரூபமான ஒலி )
சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jul-17, 1:39 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 98

மேலே