என்ன இது கிளி ஜோசியம் சிதறல் 05

என்ன இது

இதுவரை ஜாதகத்தை
நம்பாத என்னை
கிளி ஜோஸ்யக்காரனின்
அருகில் அமரச்செய்தது
உன்மேல் நான்
கொண்ட நேசம்...

கிளிபோடும் அட்டைக்காக
படபடப்போடு காத்திருக்கிறது
காதல் கொண்ட மனசு ...

சிவனும் பார்வதியும்
அட்டையில் காட்சிதர
பரபரப்பு எனக்கு

பொன்போன்ற பிள்ளை
மனசுல ஆசை இருக்கு
என்று ஆரம்பிக்க
புல்லரிக்கிறது தேகம்

ஆசைப்பட்டது நடக்கும்
என்று சொன்னதுமே
ஆயிரம் கிலோ
அல்வாவை விழுங்கியதுபோல
இனிப்பானது மனசு

காதல் திருமணம்தான்
கண்ணை மூடிக்கொண்டு
அடித்து சொன்னார்
ஆனந்தத்தில் அந்த
அனல் வெயிலிலும்
குளிர்ந்திருந்தது மனசு
குதூகலத்தை கட்டுப்படுத்த
தெரியாத உதடுகள்
குனிந்திருந்தபடியே
குழந்தையாய் சிரித்தன

ஜோசியம் கேட்ட
எனக்கு மட்டும் அதை
சொன்னாரா அல்லது
எல்லாருக்கும் இதைத்தான்
சொல்வாரா என்ற
யோசனை செய்யாமல்
பச்சைக்கிளியாய்
பறக்க ஆரம்பித்தது
பாவை மனசு !

நான் கொடுக்கும்
பத்து ரூபாய்
நன்றி கடனுக்காக
அவன் சொன்ன
பத்து வார்த்தைகள்
பறக்கும் காற்றடியாக்கியது
என்னை !

யாழினி வளன்...

எழுதியவர் : யாழினி வளன் (19-Jul-17, 10:10 am)
பார்வை : 104

மேலே