வானம் தவறி கீழே விழுந்தது

அழகான பூக்களை
பறிக்கச்சென்றேன்
பூக்கள் என முட்களை
பறித்தேன்...

மகுடம் என நினைத்து
முள்முடி சூட்டிக்கொண்டேன்
விரதம் இருந்து
விஷத்தை அருந்தினேன்...

கள்ளச்சிரிப்பில்
சிதைந்துப்போனேன்
உயிரோடு உலையில்
ஏற்றப்பட்டேன்
முக்காலமும் ஆலகாலம்...

படித்திருந்தும் முட்டாள்
முடிவெடுத்தேன்
பன்னீர் என நினைத்து
அமிலத்தை தெளித்துக்கொண்டேன்...

வரம் வேண்டி
தவம் செய்தேன்
வேதனைகளும்
சோதனைகளும்
வரமாக கிடைத்தது...

எழுதியவர் : செல்வமுத்து.M (19-Jul-17, 1:13 pm)
பார்வை : 121

மேலே