அந்த நிலாக்காரன் இவன்தான்

பூமித்தாய் கர்பமுற்றாள்
பூரண கர்பிணி அவள்
வலியால் துடி துடிக்கிறாள்
பிள்ளை வெளியே இயற்கையாய்
வர இயலவில்லையே ?

தன பெண்ணின் நிலைகண்டு
ஆடிப் போகிறான் சற்றே நிலைகுலைந்து
அந்த ஆதவனும் -யோசித்து ஓர்
முடிவுக்கு வந்து கோள் ஒருவனை
பூமிக்கு துரிதமாய் அனுப்புகிறான்
அவன் பெயர்தான்' தெய்யா' ,
அவன் ஒரு கோள்களின் வைத்தியன்
பூமியை சோதித்தான் தெய்யா
அறுவை சிகைக்காய் செய்து
பூமிக்கு பிள்ளை ஒன்றை தந்தான்
அந்தப் பிள்ளை அப்பப்பா பால்வண்ண
அழகுப்ப பிள்ளை, பூமி கையில் கூட
நிற்காமல் துள்ளி குதித்து
விண்ணை நோக்கி சென்றுவிட்டான்
தாய் பூமி கதறி அழுதும் மீண்டும்
பூமிக்கு திரும்பவே இல்லை
அன்று குழந்தையாய் போனவன்
இன்றுவரை !

அந்த அழகு பிள்ளை தான்
இன்று வளர்ந்து வானில் இரவில்
கம்பீரமாய் உலாவரும்ச,ந்திரன்
அந்த நிலாக்காரன் !
நம் பூமி புத்திரன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-17, 7:55 pm)
பார்வை : 117

மேலே