தாமரை மலரக் காத்திருந்தேன்
தமிழ் நெஞ்சத்து தடாகத்தில்
தாமரை மலரக் காத்திருந்தேன்
மலர்ந்தது தாமரை கவிதையாக !
மனமன்றத்தில்
மல்லிகை மலரக் காத்திருந்தேன்
மெல்ல இதழ் விரித்தது மல்லிகை காதல் பூக்களாக !
சிந்தனைத் தேரில்
சிரித்து முல்லை மலரக் காத்திருந்தேன்
தழுவிட மனத்தேர் இருக்க பயமேன் என்று சிரித்துப் படர்ந்தது முல்லை !
---கவின் சாரலன்